தேனி, மார்ச் 9- தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் தப்புக்குண்டு கிராமத்தில் 253.64 ஏக்கர் பரப்பளவில் கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும். ஆராய்ச்சி நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டு, கட்டடப் பணி கள் தொடங்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக் கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்காக முதற்கட்டமாக ரூ.82.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் தமிழ்நாடு அரசால். வழங்கப்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டட வளாகத்தில் நிர்வாகக் கட்டடம், கால்நடை மருத்துவமனை, கல்விப் பிரிவு கட்டடங்கள், கால்நடை பண்ணை வளாகம், கால் நடை உற்பத்தி தொழில்நுட்பக் கூடம், பிரேத பரிசோத னைக் கூடம், சிற்றுண்டியகம், மாணவர் விடுதி மற்றும் மாணவியர் விடுதி ஆகிய 19 கட்டடங்கள் மொத்தம் 3,41,770. சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.82.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். , தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுப்பையா பாண்டியன், தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் எம்.சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.