மதுரை, மே 27- சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மதுரை வைகை ஆற்றங் கரை பகுதியில் மேம்படுத்தும் பணிகள், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஓபுளாபடித் துறை யில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் மற்றும் அறிஞர் அண்ணா மாளிகை 50 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டு நுழைவுவாயில் ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை நாகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு,மற்றும் அமைச்சர்கள் பி.மூர்த்தி, முனை வர். பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன் ஆகி யோர் சனிக்கிழமையன்று மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன், மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், செல்லம் பட்டி, உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், சேடப்பட்டி. கல்லுப்பட்டி, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றி யங்களைச் சார்ந்த 1,191 ஊரக குடியிருப்புகளுக்கான 3 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சிக்கான பிரத்யோக குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர்.