districts

img

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையம் திறப்பு

தேனி, ஜூன் 8- தேனி மற்றும் போடிநாயக்கனூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்ப மையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு முழுவதும் 22 அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னா லஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்ளை காணொலிக் காட்சி  வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் .கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் துவக்கி வைத்து தொழில் 4.0 தொழில் மையத்தினை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், நிலைய மேலாண்மைக்குழுத் தலைவர் பேராசிரியர் வி.அரவிந்த், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வே.சேகரன், தேனி-அல்லிநகரம் நக ராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன், பெரிய குளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.