districts

img

புதுச்சேரியில் ஜி 20 நாடுகளின் ஆரம்ப நிலைக் கூட்டம் துவங்கியது

புதுச்சேரி,ஜன.30- ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும்  ஆரம்ப நிலைக்கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி யில் 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டம் திங்களன்று (ஜன.30) முதலியார்பேட்டை 100 அடி சாலை யிலுள்ள தனியார் விடுதியில் துவங்கியது. பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜி.ரங்கராஜன் வெளிநாட்டு பிரதிநிதிகளை  வரவேற்று பேசினார். அறிவியல் கழகத்தின் பேராசிரியர் அஷூதோஷ் ஷர்மா துவக்கவுரையாற்றினார். ஜி20 நாடுகளின் இலக்குகளை அடைவதற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மிக முக்கியமான பங்கை செலுத்தி வருகின்றன. இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்வில், உலகம் முழுமைக்கும் தற்போது பெரும் பிரச்சனைகளாக உரு வெடுத்திருக்கும் பருவ நிலை மாறுதல், பெருந்தொற்றுப் பரவல், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவு பற்றாக்குறை போன்றவற்றை  தீர்ப்பதற்கு ஜி20 நாடுகளின் அவசியம் குறித்து பலவேறு அமர்வுகளில் பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர். இந்த நிகழ்வுகளையொட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.

பிரநிதி கள் தங்கியுள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை, வீராம்பட்டி னம் ஆகிய சொகுசு உணவு விடுதி கள் அருகில் 144 தடை உத்தர வும் பிரபிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்ட அரங்குக்கு வெளியே ஜி20 நாடுகளின் தேசியக் கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடையும் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு வந்த பிரதிநிதிகள் அனைவரையும் இந்த தேசியக் கொடிகளின் அணி வகுப்பு வெகுவாக கவர்ந்தது. பலரும் கொடிகள் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.  காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் ஆர்வத்துடன் அந்த கொடிகளின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரனும் இதில் அடங்கும்.