districts

img

மூத்த தோழர் பாக்கியலட்சுமி அம்மாள் நினைவு தகவல் பலகை திறப்பு

மதுரை, மார்ச்.18- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மேலப்பொன்னகரம் பகுதிக் குழு ஜானகியம்மாள் கிளை சார்பில் மறைந்த மூத்த தோழர் வை.பாக்கியலட்சுமி அம்மாள் நினைவு தகவல் பலகை  திறப்பு விழா  வியாழனன்று மோதிலால் 2வது தெருவில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ப்ரீத்தி தலைமை வகித்தார். தகவல் பலகையை  மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி திறந்து வைத்தார். கிளைத் தலைவர் எஸ்.தனம்மாள் மாதர் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா வாழ்த்திப் பேசினார். 56-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் வி.பி.மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.