தேனி, மார்ச்.14- குறவர் பழங்குடி மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளுக்கு 2 லட்சம் பங்களிப்பு தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி வன வேங்கை கள் கட்சி சார்பில் தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் பழங்குடி இன மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 2017-ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு பட்டா வழங்கப் பட்ட இடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 102 நபர்களு க்கு வீடுகள் கட்டப்பட்டு, 88 வீடுகள் குறவர் பழங்குடி மக்க ளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணி கள் நிறைவு பெற்று வீடுகள் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் குடிசை மாற்று வாரியம்,குடியிருப்புக்கு ரூபாய் இரண்டு லட்சம் பங்களிப்பு தொகை கட்ட வேண்டும் என தெரிவித்தது. இந்த பங்களிப்பு தொகையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வன வேங்கைகள் கட்சி சார்பில் பாய், அடுப்பு, பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆட்சியர் வளா கத்திற்குள் அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை மனு வாக ஆட்சியரிடம் வழங்கிய பின்னர் கலைந்து சென்றனர்.