மதுரை, மே 21- அடையாளம் காணப் பட்ட பகுதி நேர பணியாளர் களை நிரந்தரப்படுத்த வேண்டும். 01.12.2019 க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங் மேன் மற்றும் வாரிசு பணி யாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட வேண் டும். 58 ஆயிரம் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மதுரை கிளைகள் சார்பில் புதூர் தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திரு முருகன் தலைமை வகித் தார். அமைப்பின் செயலா ளர் செல்வராஜ், பொருளா ளர் சுரேஷ் குமார், மாநகர் தலைவர் சேதுராமன் .மாந கர் செயலாளர் அறிவழகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேசினர். ஏராளமான தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர்.