மதுரை, ஜூலை 9- மதுரை நாடாளுமன்ற தொகுதி யில் மாநகராட்சி தெற்கு மண்ட லத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் மக்கள் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள மண்டபத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மூ. பூமி நாதன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், துணை மேயர் டி நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா , மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரி கள் கலந்துகொண்டு பொதுமக்க ளிடம் மனுக்களை பெற்று அதற்கான குறைகளை உடனடி யாக தீர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக கூட்டத்திற்கு தலைமை தாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசு கையில், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்க ளில் 18 நாட்கள் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் திட்ட பணி கள் குறித்த ஆய்வு நடை பெற்றது. இதில் சுமார் 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளோம். தமிழ்நாட்டி லேயே அதிகப்படியான மக்களை சந்தித்த மக்கள் பிரதிநிதிகளாக மதுரை மாவட்ட மக்கள் பிரதி நிதிகள் உள்ளனர். இப்படி நேர டியாக மக்களை சந்தித்ததால் மக்களின் அடிப்படை பிரச்சனை களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்துள்ளது. முகாமில் கலந்து கொண்ட மக்க ளுக்கு பல்வேறு பிரச்சனைகளை முகாம்களிலேயே தீர்க்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், கொரோ னா காலத்தில் பேருந்து இயக்கம் உட்கடை கிராமங்கள் வரை நிறுத்தப்பட்டது அது முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அப்பகு திகளில் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை முகாம்கள் மூலம் தீர்வு கண்டுள்ளோம். தற்போது மாநக ராட்சி பகுதிகளிலும் இதுபோன்ற முகாம்களை ஏற்பாடு செய் துள்ளோம். அடுத்த கட்ட முகாமினை வடக்கு தொகுதி யிலும் அதேபோல் மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்ட லங்களிலும் முகாம்களை நடத்த உள்ளோம், அந்த அடிப்படையில் அரசுத்துறை அதிகாரிகள் கொடுக் கப்படும் மனுக்கள் மீதான பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார்.
செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியில், பாஜக மாநில நிர்வாகி ஒருவர் தங்களுடைய நாடாளு மன்ற தொகுதியில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் ஒரு துப்புரவு தொழிலாளியை கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கழிவு நீர் தொட்டி க்குள் இறங்கி சுத்தம் செய்ய சொன்னபோது விஷவாயு தாக்கி இறந்துள்ளார் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார் இதற்கு தங்களு டைய பதில் என்ன என்று செய்தி யாளர் கேட்டார்.
தவறான செய்திகளை பரப்பிய பாஜக நிர்வாகி சூர்யா
இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி.,அளித்த பதிலில், நானும் சமூக வலைதளத்தில் பார்த்தேன். இதை பாரதிய ஜனதா கட்சியி டம்தான் கேட்க வேண்டும். அந்த லெட்டர் பேடில் முகவரியோ, தொலைபேசி எண்ணோ கிடை யாது .ஆனால் மாநிலப் பொ துச்செயலாளர் என்று போட்டு எஸ். ஜி. சூர்யா என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளி யிட்டுள்ளார் .மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி என்பது கிடையாது அதேபோல் தமிழகத்தில் இது போல் ஒரு பேரூராட்சி இருக்கின்றதா ? அதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கள் இருக்கிறார்களா என்பதை யும் பாஜக தான் தெரிவிக்க வேண்டும் மேலும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் என்ற அடிப்ப டையில் என் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவ தற்காகவே பாஜக இது போன்ற வேலைகளை செய்து வருகிறது. எனவே பாரதிய ஜனதா கட்சி இது போன்ற தவறான புகார் செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பிற்பகல் பாலரெங்காபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு மற்றும் திட்ட பணிகள் ஆய்வு முகாமில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், புதிதாக பொறுப்பேற்ற ஆணையாளர் கே. ஜே. பிரவீன் குமார், துணை மேயர் டி. நாகரா ஜன் மண்டல தலைவர் முகேஷ் சர்மா மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் ஆகியோர் ஓபுளா படித் துறை கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்த 27 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், பகுதிக்குழு செயலாளர்கள் பி. ஜீவா, ஜெ. லெனின், வி. கோட்டைச்சாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழகத்திலே முதன்முறையாக மதுரையில் புதிய முயற்சி
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் பேசுகையில், தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்ட மன்ற தொகுதிகளில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் ஆய்வை கடந்த ஓராண்டாக நடத்தி வருகின்றோம், குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதியான மேலூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிரா மங்களிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி யுள்ளோம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிக ளிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தியுள் ளோம். தற்போது தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி மண்டலம் - 4ல் காலையிலும் பிற்பகலிலும் மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பணிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி, வருவாய் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 20 துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது மற்றும் மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து மக்கள் பிரதிநிதி, மக்கள், அரசு நிர்வா கம் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து செயல் படுத்துவதற்கான ஒரு முயற்சி தமிழகத்தில் இதுதான் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இதுதான் அர சுக்கும் மக்களுக்குமான ஒரு இணைப்பு .அந்த அடிப்படையில் வியாழனன்று அம்ருத் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் இன்னும் நடை பெறக்கூடியவை, நடத்தப்பட்டவைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடத்தப் பட்டது. வரும் 15ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் (DISHA) நடை பெற உள்ளது இதில் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெறும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பேசப்படும். இதில் மத்திய மாநில அரசுகளின் திட்டப்பணிகள் முறையாக பயனாளிகளுக்கு சேருகிறதா என்பது குறித்தும் பேசப்படும். அந்த அடிப்படையில் தான் இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்றார்.