மாமேதை காரல் மார்க்ஸ் 205 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு நாகு நகர் கிளை சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பாட்ரிஸ் லுமூம்பா படிப்பகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் தியாகி லீலாவதி நினைவாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் ஜான்போஸ்கோ தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச்செயலாளர் மா. கணேசன், பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன் மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.