districts

img

சாதிச் சான்று, பட்டா வழங்க மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூலை 18- சூளகிரி வட்டம், ராமன் தொட்டி, நாகமலை, சின்ன குத்தி, பெரிய குத்தி, முனியம்மா பிரிட்ஜ் உட்பட 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மலைவாழ், பழங்குடி, இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்றும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு களுக்கும், நீண்ட காலமாய் விவ சாயம் செய்து வரும் நிலத்திற்கும் பட்டா வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.   மலைவாழ் மக்கள் சங்கத்தின் சூளகிரி வட்ட மாநாடு ராமன் தொட்டியில் நடை பெற்றது. சிபிஎம் வட்டச் செய லாளர் முனியப்பா தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் பிரகாஷ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் முருகேஷ், அஞ்செட்டி வட்டச் செயலாளர் சிவராஜ், தலைவர் முனிசிவா, பொரு ளாளர் குமார வடிவேல் ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத் தலைவர் சண்முகம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முருகன் நன்றி கூறினார். பழங்குடி மலைவாழ் இருளர் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும், குடி யிருப்பு பகுதிகளில் சுகாதாரம், தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக கெஞ்சப்பா, செய லாளராக முருகன், பொரு ளாளராக மாதேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.