விருதுநகர், நவ.24- விருதுநகர் மாவட்டம் வத்திராயி ருப்பில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோரிக்கை மாநாடு மற்றும் வாச்சாத்தி வெற்றி விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். ஆர்.மகேந்திரன், கே.ஜீவா னந்தம், தங்கப்பாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜய முருகன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானங்களை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன் முன்மொழிந்தார். வாச்சாத்தி வழக்கு மற்றும் வெற்றி குறித்து மாநிலத் தலைவர் பி.டெல்லிபாபு சிறப்புரையாற்றினார். இதில் கருத்தப்பாண்டி, முருகேசன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில் மாவட்டத் தலைவராக கே.கருப்பசாமி, செயலாளராக சி.பெனரி, பொருளாளராக எஸ்.தெய்வானை ஆகியோர் உட்பட 13 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், மலைவாழ் மக்கள், வனப் பகுதியில் சென்று பொருட்களை சேகரிக்க வும், விற்கவும் உள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். சாதிச் சான்றுக ளை விரைவில் வழங்க வேண்டும். விருது நகர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பிளவக்கல் பட்டுப் பூச்சி பகுதி யில் சாலை வசதி செய்து தர வேண்டும். வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப் பாறை, நெடுங்குளம், அத்திகோவில், இராஜபாளையம் அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதோடு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மலைவாழ் மக்க ளின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர பேருந்து வசதி செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.