districts

img

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் போராட்டம்

மதுரை, ஜூன் 3- தமிழக அரசு, சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத  பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5200- ரூ. 20,200, தர ஊதியம் ரூ. 1900  வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதி யத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி  வழங்க வேண்டும். சாலைப்  பணியாளர்களில் இறந்தோ ரின் வாரிசுகளுக்கு நெடுஞ் சாலைத் துறையிலேயே மிக  விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் மதுரையில் ஜூன் 3 சனிக்கிழமையன்று கோரிக்கை முழக்கப் போராட்டம் மற்றும் தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. மதுரை புதூர் சாலையில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட் டத் தலைவர் த. மனோகரன் தலைமை வகித்தார். மாநி லப்பொருளாளார் இரா. தமிழ் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வே. சோலையப்பன் விளக்கிப் பேசி னார், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர்  க.நீதிராஜா உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் ஆதரித்துப் பேசினர். சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரை யாற்றினார். மாவட்ட பொரு ளாளர் நா.முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.