மதுரை,அக்.1- பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் ஒன்றிய தொல்லியல்துறை அக்கறை காட்டுவதில்லை என்று ஒன்றிய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள இந்திரன் சன்னதியை பராமரித்து ஆராதனை செய்து வழிபட நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஒன்றிய தொல்லியல்துறை கல்லறைகளை பாதுகாக்கவே உள்ளதாக தெரிகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை பாதுகாப்பது தொல்லியல்துறையின் கடமை. அரியலூர் - தஞ்சை சாலையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தால் ஏராளமான கனரக வாகனங்கள் கோவில் பகுதியை கடந்து செல்கின்றன. வருங்காலத்தில் கோயிலின் நிலை என்னவாகும் என யோசிக்கவில்லை என்று கூறி, ஒன்றிய தொல்லியல்துறை, கோவில் நிர்வகம் மற்றும் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.