districts

img

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பாரம்பரிய மரபு பயணம்

விருதுநகர், ஏப்.18- உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்  நாடு சுற்றுலாத் துறை இணைந்து முதன்முறை யாக முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்களை காண்பதற்கான ஒரு நாள் பாரம்  பரிய மரபு பயணம் ஏப்ரல் 18 செவ்வாயக்கிழமை யன்று நடைபெற்றது. இப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார். இதையடுத்து, பாரம்பரிய மரபு பயணத்தில் மூவரை வென்றான் பகுதியில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான இடைக்கால பாண்டி யர்காலத்து மலைக்கொழுந்தீஸ்வரர் குடை வரை கோயிலையும், அங்குள்ள கல்வெட்டு களில் முதலாம் மாறவர்ம சுந்தரப்பண்டிய முடி சூட்டு விழா செய்தி, குலசேகர பாண்டியனின் ஆட்சிகாலத்தில் காரான்மை காணியாக 10 நபர்களுக்கு தானமாக வழங்கிய செய்திiயும் பயணிகள் கண்டு வியந்தனர். பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள குன்னூரில் 2500 ஆண்டுகள் பழமையான வரலாற்று ரீதியாக ஒரு குழுத் தலைவன் அல்லது சமூக தலைவன் மரண மடையும் போது நினைவுச் சின்னமாக எழுப் பப்படும்,

சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட சுமார் 20 அடி உயரமுள்ள நெடுங்கல், கிருஷ்ணன்கோவில் மலை அடிவாரத்தில் சிதரிய நிலையில் உள்ள உடைந்த முதுமக்கள் தாழி ஓடுகள்,  திருமலை நாயக்கர் காலத்தில் பயணமாக செல்லும் பொதுமக்கள் தங்குவதற்காக கலை சிற்பங்களுடன் கட்டப்பட்ட கல்மண்டபம், மன் னர் தங்குவதற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதி, மேலும், திருமலைநாயக்கர் மன்னர், ஆண்டாள் திருக்கோவிலுக்கு வரும் போது தங்குவதற்காக கட்டப்பட்ட வட்டவடிவிலான முற்றம், பிரம்மாண்டமான அரண்மனை, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் நீதிமன்றமாக செயல்பட்ட வரலாற்று சின்னங்களையும், இந்த  பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்ட பய ணிகள் மற்றும் செய்தியாளர்கள் கண்டுகளித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இந்த சுற்றுலா மூலம் மாவட்டத்தில் உள்ள தொன்மையான, பாரம்பரியம் மிக்க இடங் களை வெளிக்கொணர்ந்து உலகறிய செய் வதே நோக்கமாகும் என தெரிவித்தார். மேலும் இதில், மாவட்ட சுற்றுலா அலுவலர் அன்பரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.