தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் ஞாயிறு இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் திங்களன்று காலை மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால்சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.