districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார செவிலியர்கள் போராட்டம்

மதுரை, மே 12-  மாநகராட்சி நகராட்சியில் பணிபுரியும்  சுகாதார செவிலி யர்களுக்கும் பொருந்துமாறு ஒரே அரசாணையினை நகர  சுகாதார செவிலியர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலி யர்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத் தொகை  வழங்க வேண்டும் . 5 ஆண்டுகளாக வழங்கி டாத சீருடைப் படி உடனே வழங்க  வேண்டும் .பதவி உயர்வு வழங்க வேண்டும் . காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் -மதுரை மாநகராட்சி நகர- பகுதி சுகா தார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்  டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எம். பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ். பரமேஸ்வரி கோரிக்கைகளை விளக்கி பேசினார்,  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதிராஜா சிறப்புரையாற்றினார். எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்டத் தலைவர்  டி. ராஜி ஆதரித்துப் பேசினார். மாவட்ட துணை செயலாளர் ஷர்மிளா தேவி நன்றி கூறினார்.