districts

மதுரை முக்கிய செய்திகள்

சாத்தூர்: சாலை விபத்தில் ஒருவர் பலி

சாத்தூர், மார்ச் 9- சாத்தூர் அருகே 4 வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளான தில் அதில் பயணம் செய்தவர் உயிரி ழந்தார். தூத்துக்குடி மாவட்டம் எட்டைய புரம் அருகே உள்ளது நடுவிற்பட்டி. இப் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து(43). இவரை அதே பகுதியைச் சேர்ந்த மாட சாமி(63) என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் விருதுநகரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பின்பு, இருவரும், மீண்டும் ஊருக்கு வாகனத்தில் புறப்பட்டனர். சாத்தூர் அருகே 4 வழிச்சாலையில் சென்ற போது, குறுக்கே ஒரு வாகனம் வந் துள்ளது. இதையடுத்து, மாடசாமி வண்டி யை இடதுப்புறத்தில் திருப்பினாராம். இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற காளிமுத்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சாத் தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்பு, மேல் சிகிச்சைக்காக மதுரை யில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந் நிலையில், சிகிச்சை பலனிற்றி காளி முத்து உயிரிழந்தார்.  இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் பலி

விருதுநகர், மார்ச் 9- விருதுநகர் அருகே சாலையை கடந்த வர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் நாராயணமடம் தெரு வைச் சேர்ந்தவர் கணேசன் மகன் நாக ராஜன்(52). இவர் தனியார் சிமிண்ட் கடை யில் வேலை செய்து வந்தார். இந்நிலை யில், மல்லாங்கிணறு சாலையில் உள்ள கடையில் தேநீர் அருந்தி விட்டு, மீண்டும் கடைக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஊரக காவல்துறையினர் இரு சக்கர வாகன ஓட்டுநர் முனியசாமி என்பவரை கைது செய்தனர்.

தனியார் பேருந்து  மோதி ஒருவர் பலி

திருச்சுழி, மார்ச் 9- திருச்சுழி அருகே தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய தில் தனியார் நிறுவன ஊழியர் பலியா னார். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி யைச் சேர்ந்த வாழவந்தான் என்பவரது மகன் குருபிரசாத்(30). இவர் திருச்சுழி யில் உள்ள தனியார் நிறுவனத்தில் பண வசூல் செய்யும் பணி செய்து வந்தார். இந்நிலையில், தனது இரு சக்கர வாக னத்தில் திருச்சுழியிலிருந்து கமுதி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். இலுப்பை யூர் விலக்கு அருகே சென்ற போது தனி யார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றா ராம். அப்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே குருபிரசாத் உயிரிழந் தார்.  இதுகுறித்து வீரசோழன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர் கோபால் என்பவரை கைது செய்தனர்.

கோவிலில் தங்கம், வெள்ளி பொருள் திருட்டு

அருப்புக்கோட்டை, மார்ச் 9- அருப்புக்கோட்டை அருகே உள்ளது பாலையம்பட்டி, இங்குள்ள மதுரை சாலையில் பழமை வாய்ந்த விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. பூசாரியாக பாலமுருகன் என்பவர் உள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள்  காலையில் வந்து பார்த்த போது கோவி லின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சிய டைந்த அவர், உள்ளே சென்று பார்த் துள்ளார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 2 கிராம் தங்கத்தாலி மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து  கொள்ளையர்களைத் தேடி வருகின்ற னர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவிலில் கோபுர கலசங்கள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

மலையோரங்களில் வாழ்ந்து வரும் விவசாயிகளின் நிலங்களை பாதுகாத்திட கோரி மனு

நாகர்கோவில், மார்ச் 9- கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையோரங்களில் வாழ்ந்து வரும் விவசாயிகளிடம் உள்ள நிலங்களை பாதுகாத்திட வேண்டும் போன்ற  பிரச்சனை கள் குறித்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆரல்வாய்மொழி முதல் ஆறுகாணி வரையிலான மலை யோரப்பகுதிகளில் வாழ்ந்து வரும்  நூற்றுக்கணக்கான மலைவாழ் குடும்பங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் கையகப்படுத்தும் நடவடிக்கையை வன இலாகாவும் வருவாய்துறையும் கைவிட வேண்டும், ஏழை மலையோர மக்களை அவர்களது கைவசமுள்ள நிலங்களில் குடி யிருக்கவும் தொடர்ந்து விவசாயம் செய்யும் அனுமதி அளிக்க வேண்டும் என மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது  இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சைமன் சைலஸ், மாவ‌ட்ட செயலாளர் ஆர். ரவி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் மிக்கேல் மற்றும் விவசாயிகள் பொன்னையா, சுந்தரம், தங்கராஜ்  ஆகி யோர் கலந்து கொண்டனர்.

இளம்பெண் கொலை: கணவர் உள்பட 3 பேர் சரண்

தூத்துக்குடி,மார்ச் 9 தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (27). கார் ஓட்டு நராகப் பணிபுரிந்து வருகிறார். தாள முத்து நகரைச் சேர்ந்தவர் மாரிச்செல்வி (19). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே மாரிச் செல்வி அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததால், கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், தாள முத்து நகரில் உள்ள தாய் வீட்டிற்கு மாரிச் செல்வி சென்றுவிட்டாராம். இதனிடையே மனைவியை சமா தானப்படுத்தி அழைத்து வருவதற்காக தனது நண்பரான முத்துக்குமார் உள் ளிட்டோருடன் பொன்ராஜ் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மாரிச் செல்வியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன் ராஜ், முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய மூவரும், திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதித்துறை நடுவர் லலிதா ராணி முன்னிலையில்  சரணடைந்தனர்.

மலைப்பகுதி குடிநீர் தொட்டிகளில் வனவிலங்குகளுக்காக நீர் நிரப்ப கோரிக்கை

கடமலைக்குண்டு, மார்ச் 9- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார்கோவில் மலைப்பகுதி யில் கடமான், செந்நாய், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள் ளன. திங்கள் கிழமை இரவு சுமார் 2 வயது மதிக்கதக்க ஆண் கடமான் ஒன்று குடிநீர் தேடி அய்யனார்புரம் அருகே உள்ள தனி யார் தோட்டத்திற்கு வந்தது.  அப்போது தோட்டத்தில் இருந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியானது.  தகவலறிந்த கண்டமனூர் வனத்துறை யினர் செவ்வாய்க்கிழமை காலை கட மலைக்குண்டு தீயணைப்பு வீரர்கள் உதவி யுடன் கடமான் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் வெயிலான் மூலம் கடமானை பிரேத பரி சோதனை செய்து மலைப்பகுதியில் புதைத் தனர்.  இதற்கிடையே கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயி லின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இத னால் மூலவைகை ஆறு மற்றும் மலைப்பகு திகளில் உள்ள சிறு சிறு குளங்களில் நீர் முழுமையாக வற்றி விட்டது. இத னால் மலைப்பகுதியில் உள்ள கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் தேடி தனியார் தோட்டங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளது. இதனால் வனவிலங்கு கள் தேனி சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டோ அல்லது கிணற்றில் விழுந்தோ பலியாக வாய்ப்பு கள் அதிகம் உள்ளது.  எனவே மழை காலம் தொடங்கும் வரை அய்யனார்கோவில் மலைப்பகுதியில் வனத்துறையினர் சார்பில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் வனவிலங்குகளின் தேவைக்காக குடிநீர் நிரப்பி வைக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் ஆட்சியரக கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

திண்டுக்கல், மார்ச் 9- திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் அலு வலக கூட்டரங்கில் புதனன்று விவ சாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்ற வேளாண் நிதி நிலை அறிக்கை குறித்தான கருத்துக்கேட்பு கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க பிரதி நிதிகள் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் மூத்த விவசாய சங்கத் தலைவர்கள் இருக்கும் போது அவர்களை புறக்கணித்துவிட்டு அதிமுக, பாஜவைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்களை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முத லில் அழைத்து கருத்து கேட்டதாக விவசாயி கள் புகார் கூறுகின்றனர்.  இதனால் கோபமடைந்து பிற விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் மூத்த விவ சாய சங்கத்தலைவர் லட்சுமணபெருமாள் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.  இதனையடுத்து அரங்கம் வெறிச்சோடி யது. பதற்றமடைந்த வேளாண் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் விவசாய சங்க தலைவர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து மீண்டும் கூட் டம் நடைபெற்றது.

தமிழகத்தில் எங்கும் இல்லாத கொடுமை  தறிக்கு உரிம கட்டணம்; தொழிலாளிக்கு தொழில் வரி  ஆண்டிபட்டி அருகே ஊராட்சியில் அதிரடி வசூல்

மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

தேனி, மார்ச் 9- தமிழகத்தில் எங்கும் இல் லாத கொடுமை .ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் வீடு களில் இயங்கி வரும் நெசவு தறிக்கு உரிம கட்டணம் ரூ.100, தொழிலாளிக்கு தொழில் வரி ரூ.2500 என ஊராட்சி நிர்வாகம் வரி விதிப்பு செய்துள்ளமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றி யக்குழு செயலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம், டி.சுப்புலாபுரம் கிளை செயலாளர் கோதண்டராமன் ஆகியோர் ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்  துள்ள புகாரில் தெரிவித்துள்ள தாவது: ஆண்டிபட்டி ஒன்றியம், டி.சுப்புலாபுரம் கிராமத்தில், ஆயி ரக்கணக்கானோர் நெசவு தொழில் செய்து வருகிறார்கள். சிறு விசைத்தறி கூடங்களிலும், வீடுகளில் ஒரு தறி ,இரண்டு தறி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி இயங்கி வருகிறது. இந்த ஊரில் நெசவுத்தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வரும்  நிலையில் டி.சுப்புலாபுரம் ஊராட்சி, அவர்களின் மீது பெரும் சுமையை ஏற்றி உள்ளது. வீடு களில் இயங்கி வரும் தறிக்கு ரூ. 100 உரிம கட்டணம், நெசவு தொழி லாளிக்கு ரூ.2500, தறிக் கூடங்க ளில் இயங்கும் தறிக்கு ரூ.50 உரிம கட்டணம், தொழில் வரி ரூ. 1250 என வரி விதிப்பு செய்துள் ளது. ஏற்கனவே நசிந்து கொண்டி ருக்கும் நெசவு தொழில் மீது தொடுக்கப்படும் மிகப்பெரிய தாக்குதலாகும். தமிழகத்தில் பல  லட்சம் விசைத்தறிகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் எங் கும் வரி விதிக்கப்படவில்லை. டி.சுப்புலாபுரம் ஊராட்சி யின் கொடூர வரி விதிப்பானது, விசைத்தறி தொழிலையே அழித்து விடும். நெசவாளர்களை யும், நெசவு தொழிலையும் பாது காப்பது தமிழக அரசின் கடமை யாகும். எனவே தமிழக அரசு தலையிட்டு விசைத்தறிகள் மீது ஊராட்சி மன்றம் விதித்துள்ள கொடூர வரியை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கும் படி அந்த மனு வில் தெரிவித்துள்ளனர். மனு அளிக்கும் போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் தயாளன், மா.தங்கராஜ், ஆண்டிபட்டி பேரூராட்சி உறுப்பி னர் சின்னன் ஆகியோர் உடனி ருந்தனர்.

உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  இன்று மருத்துவ முகாம்

தேனி, மார்ச் 9- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, உத்தமபாளையம் வட்டார வள மையம் சார்பில் வியாழனன்று மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறு கிறது. மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் 1 மணி வரை உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் (கல்லூரி அருகில்) நடைபெறும். 18 வயது வரை யிலான அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளும் பெற்றோரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.முகாமிற்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்: போட்டோ 6, ரேசன் கார்டு நகல், ஆதார்  கார்டு நகல், மருத்துவ குறிப்பு சான்றி தழ், வங்கி கணக்கு நகல். தொடர்புக்கு: 6369953921 / 8973414051

ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 9- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த ஏ. இளங்கோவன் தென்காசி கோவி லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவ ருக்கு பதிலாக விருத்தாச்சலம் அருகே விருத்தகிரி கோவில் செயல் அலுவலராக பணியாற்றிய எம்.கே. முத்துராஜா திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறியாளர் வீட்டில் ரூ.16லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை 

தூத்துக்குடி, மார்ச் 9 தூத்துக்குடியில் அனல்மின் நிலைய பொறியாளர் வீட்டில் சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை யடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 2 குடியிருப்பில் வசித்து வருபவர் உதய சூரியன் மகன் சரவணன் (40). இவர் தூத் துக்குடி அனல்மின் நிலையத்தில் பொறி யாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ம் தேதி குடும்பத்துடன் அருப்புக் கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். செவ்வாய் பிற்பகல் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த  செயின், நெக்லஸ் உள்ளிட்ட 49 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தது.  இதன் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சர வணன், தெர்மல் நகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பிச்சையா பாண்டியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தெர்மல் நகர் குடியிருப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தொடர் கொள்ளை சம்பவங்களால் அனல்மின் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயி வீட்டில் ரூ.13லட்சம் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி, மார்ச் 9- திருச்செந்தூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.13லட்சம் மதிப்புள்ள நகை களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம  நபர்களை போலீசார் தேடி வருகின்ற னர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந் தூர் அருகேயுள்ள நாலுமூலைக்கிணறு, சந்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் வடுகன் மகன் முப்பிடாதி முத்து (45). விவசாயி. இவர் கடந்த 28ம் தேதி குடும் பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். செவ்வாயன்று ஊர் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 37¼ பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.13லட்சம் என தெரிகிறது. இதுகுறித்து திருச்செந் தூர் தாலுகா காவல் நிலையத்தில் முப் பிடாதி முத்து புகார் அளித்துள்ளார். புகா ரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதி்ந்து விசாரணை நடத்தி வரு கிறார். நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி  வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

விருதுநகர் அணைத்தாழப்பட்டி பள்ளி - சமுதாயநலக் கூடத்தில் உள்ள சாதிப் பெயரை உடனே நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 9-  விருதுநகர், அணைத் தாழப்பட்டி பள்ளி மற்றும் சமு தாயநலக் கூடத்தின் கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதி பெயரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் திரு வில்லிபுத்தூர் வட்டாட்சிய ருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்தி ருந்தார்.  அதில் “அணைத்தாளப் பட்டி கிராமத்தில் உள்ள சர்வே எண் 534/1, 534/2 ஆகிய பகுதி கள் குறிப்பிட்ட சமுதாயத்தின ரின் பயன்பாட்டில் பல ஆண்டு களாக இருந்து வந்தது. அரசுப் பள்ளி, கோவில் கட்டப்பட்டும், விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இடங்களை எங்கள் சமூகத்தி னர் பயன்படுத்த தொடர்ச்சி யாக இடையூறு செய்து வரு கின்றனர். கோவில், பள்ளி உள் ளிட்ட இடங்களில் நுழைய அனுமதிப்பதில்லை. மாற்று சமூ கத்தினரின் தரப்பில் அந்த இடத் தில் சமுதாயக்கூடம் கட்டுவ தற்காக திட்டமிட்டு இதுபோல இடையூறு செய்து வருகின்ற னர். ஆகவே அணைத்தாழப் பட்டி கிராமத்தில் மாற்று சமூ கத்தினர் சார்பில் சமுதாயக் கூடம் கட்ட தடை விதித்து உத்தர விட வேண்டும்” என கூறியி ருந்தார்.  இந்த வழக்கு புதனன்று நீதி பதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் அரசுப்பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடத்தின் கேட் டில் மாற்று சமூகத்தினரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இதுபோல இடையூறுகளை செய்து வரு கின்றனர்” என வாதிடப்பட்டது.  அதற்கு, “பொது இடத்தின் நுழைவு வாயிலில் எவ்வாறு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர்  பயன்படுத்தப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி,  கேட்டில் குறிப்பிடப்பட்டிருக் கும் சாதி பெயரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் உட னடியாக நீக்கவும் அதுதொடர் பாக அறிக்கை தாக்கல் செய்ய வும் திருவில்லிபுத்தூர் வட் டாட்சியருக்கு உத்தரவிட்டார். வழக்கை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.