செந்துறை அருகே பெண் சடலம்
நத்தம், ஏப்.10- திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே சேத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி(35). இவர் ஏப்ரல் 9 அன்று அதிகாலையில் நத்தம்- துவ ரங்குறிச்சி சாலையில் உள்ள மங்கம்மாள் சாலை பகுதியில் தனது இரு சக்கர வாக னத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத் திற்கு சென்ற நத்தம் போலீசார் இறந்த வரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமதியின்றி பட்டாசு, கருந்திரி வைத்திருந்த 3 பேர் கைது
வெம்பக்கோட்டை, ஏப்.9- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (40), கிருஷ்ணசாமி (57) ஆகியோர் அனுமதி யின்றி 25 கிலோ உதிரிபட்டாசுகள் மற்றும் 30 சரவெடிகள், வெடி தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஆகியவற்றை வைத்திருந்த னர். எனவே, இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்ததோடு பட்டாசுகளை பறிமுதல் செய்னர். மற்றொரு சம்பவம் இதேபோல், அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அனுமதியின்றி 38 குரோஸ் கருந்திரிகளை வைத்தி ருந்தார். எனவே, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரிக்கின்றனர்.
லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலருக்கு 2 ஆண்டு சிறை
விருதுநகர், ஏப்.9- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தலைமைக் காவல ராக பணிபுரிந்து வந்தவர் கோவிந்தராஜ். இவர், ஒரு வழக்கில், நாச்சியார்பட்டி யைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனி வாசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 2008 டிசம்பர் 12 அன்று லஞ்ச பணத்தை சீனிவாசனிடம் இருந்து வாங்கிய போது, கோவிந்த ராஜை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பிடித்தனர். இந்த வழக்கானது, திரு வில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்ற வியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஹாஜிரா, லஞ்சம் வாங்கிய கோவிந்த ராஜூக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இராஜபாளையம் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் அகஸ்தி யர் (28). 2018ஆம் ஆண்டு 9 வயது சிறு மிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர் மீது ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூ ரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை அகஸ்தியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.
திருவில்லிபுத்தூரில் 22 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
திருவில்லிபுத்தூர், ஏப்.9- திருவில்லிபுத்தூர் இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே விற்ப னைக்காக புகையிலை வைத்திருப்ப தாக காவல் சார்பு ஆய்வாளர் மருது பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 22 கிலோ புகையிலை இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த திருவில்லிபுத்தூர் அன்னை சத்யா நக ரைச் சேர்ந்த முனியன் மகன் ராமசாமி (64), கம்மாபட்டி கொண்டித்தெழு தெரு வைச் சேர்ந்த பொன்னை மகன் முத்து சாமி(56) ஆகிய இருவரையும் நகர் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 22 கிலோ புகையிலை மற்றும் புகை யிலை விற்ற பணம் 10,230 ரூபாயை பறி முதல் செய்தனர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம், ஏப்.9- தமிழக அரசால் அறிவிக்கப் பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை திட்டத் தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டு களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வரு கிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். கோவிட்-19 காரணமாக உரிய சமூக இடைவெளியை கடை பிடித்து அனைத்து வேலை நாட்களிலும் பயன்தாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும். நேரில் வர இயலாதவர்கள் உதவித்தொகை கோரும் விண்ணப்பத் தினை வேலைவாய்ப்புத்துறை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இணை யதள முகவரியான https://tnvelai vaaippu.gov.in- லிருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும், உதவித்;தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்து ரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. எனவே இம்மாவட்டத்தைச் சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் உத வித்தொகை கோரி விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலை வர் சங்கர் லால் குமாவத், தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி தந்தை, மகன் பலி
தேனி, ஏப்.9- பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத் துக்குள்ளானதில் தந்தை, மகன் பரிதாப மாக உயிரிழந்தனர் . தேவதானப்பட்டி அருகே எ.ரெங்கநாத புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 29). இவர் தனது மனைவி கவுரி, மகன் ராஜ பாண்டி (4), தாய் பழனியம்மாள் ஆகியோரு டன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தேவதானப்பட்டி அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்து நலன் விசாரித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேவதானப் பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன் பட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டி மற்றும் அவரது மகன் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த கவுரி மற்றும் பழனியம்மாள் ஆகி யோர் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற தேவதா னப்பட்டி காவல்துறையினர் செல்லப் பாண்டி மற்றும் ராஜபாண்டி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டு நரை தேடி வருகின்றனர்.
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, ஏப்.9- நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 350 கனஅடியாக அதிகரித்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.15 அடியாக இருந்தது. அணையில் இருந்து 3,650 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை முல்லைப்பெரியாறு அணையில் 43.6 மிமீ, தேக்கடியில் 30 கூடலூரில் 3.8 மி.மீ, சண்முகா நதியில் 11.5 மி.மீ, உத்தமபாளையத்தில் 12 மி.மீ., போடியில் 39.6 மி.மீ. மழை யளவு பதிவாகி இருந்தது.
திருச்சுழியில் கட்டுமான சங்க புதிய கிளைகள் அமைப்பு
திருச்சுழி, ஏப்.9- திருச்சுழி ஒன்றியம் பரளச்சியில் (சிஐ டியு) கட்டுமானத்தொழிலாளர் சங்கத் தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக இந்திராகாந்தி, செயலாளராக செல்வராணி, பொருளா ளராக சரவணக்குமார், துணைத் தலை வர்களாக சங்கீதா,ஜெயக்குமார், துணைச் செயலாளர்களாக ஆறுமுகம், பூரணம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். முத்துராமலிங்கபுரத்தில் கிளைத் தலைவராக ரமேஷ், செயலாளராக அமுதா, பொருளாளராக ஞானசௌந் தரி, துணைத் தலைவராக உமாமகேஸ் வரி, துணைச்செயலாளராக ராஜ லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். கிளை அமைப்புக் கூட்டங்களில் மாவட்ட செயலாளர் பெ.இராமர், ஒன் றிய செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
விருதுநகரில் சேதமடைந்த 272 கட்டிடம் அகற்றம் ஆட்சியர் தகவல்
விருதுநகர், ஏப்.8- விருதுநகர் மாவட்டத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள சேதமடைந்த 272 கட்டிடங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களில் சேதமடைந்த மற்றும் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள 317 கட்டிடங்கள் கணக்கெடுக் கப்பட்டன. அதில் 272 கட்டிடங்கள் உட னடியாக இடித்து அப்புறப்படுத்தப் பட்டன. மீதமுள்ள 45 கட்டிடங்களில் 8 அங் கன்வாடி மையங்கள், 12 பள்ளி கட்டி டங்கள், 25 பிற கட்டிடங்களும் உள்ளன. அவை விரைவில் அகற்றப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
நத்தம், ஏப்.9- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சமரச தீர்வு மையம் சார்பாக சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு நத்தம் நீதிபதி கலையரசி ரீனா தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.நீதிமன்ற வளா கத்தில் தொடங்கிய ஊர்வலம் யூனியன் ஆபிஸ், பேருந்து லையம், கடைவீதி வழி யாக சென்று மீண்டும் நீதிமன்றம் திரும்பியது. இதில் தலைமை எழுத்தர் முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் ,நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், சமரச தீர்வு மையத்தினர் கலந்து கொண்டனர்.
வாழை கன்று நட்டு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.9- சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளை ஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியா ளர்கள் சங்கத்தினர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள கோட்ட பொறியா ளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாழை கன்று நட்டு கவன ஈர்ப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கோட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.
எர்ணாகுளத்தில் ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டும் கிராபீன் மையம்
திருவனந்தபுரம், ஏப். 9- புதுயுகப் பொருளான கிராபீன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்குமான இந்திய கண்டு பிடிப்பு மையம், எர்ணாகுளத்தில் உள்ள வணி கத் தலைநகரில் (IICG) அமைய உள்ளது. இத்திட்டத்தை டிஜிட்டல் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு நிறுவனமான எலக்ட் ரானிக்ஸ் டெக்னாலஜிக்கான மெட்டீரியல் மையமும் இணைந்து செயல்படுத்தும். டாடா ஸ்டீல் லிமிடெட் வணிக பங்குதாரராக இருக்கும். இத்திட்டத்தில் 2டி மெட்டீரியல் பூங்காவும் இடம்பெற்றுள்ளது. முதல் ஐந்து ஆண்டுகளில் 250 புதிய உயர் தொழில்நுட்ப முயற்சிகள் இலக்கு. 50,000 பேர் நேரடியாகவும், இரண்டு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். முதற்கட்டமாக ரூ.2,500 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாண்டு களில் ரூ.10,000 கோடி வர்த்தகம் நடை பெறும். இவை, ஆரம்ப முயற்சிகள் (இங்கு பேசன்), திறன் மேம்பாடு, பயிற்சி, ஆலோசனை, அறிவு பரிமாற்றம் மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கல் ஆகிய துறை களில் இருக்கும். துகள் வடிவிலான ‘கிராபீன்’ அறிவியல் சமூகம் கிராபீனை மனித வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு அதிசயமாக பார்க்கிறது. இது வைரத்தை விட 40 மடங்கும், எஃகை விட 200 மடங்கும் வலிமையானது. மிகவும் மெல்லியது. உடை யாத கண்ணாடி போன்றது, மின் கடத்தியான கிராபீன் சிறப்பு பவுதீக, வெப்ப, மின்சார, ஒளியியல் பண்புகளை கொண்டுள்ளது. மின்னணு, தொழில், உற்பத்தி, கட்டுமான துறைகளில் கிராபீன் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒன்றிய அரசால் அங்கீ கரிக்கப்பட்ட திட்டத்தின் ஆரம்பச் செயல் பாட்டிற்கு முதல் தவணையாக ரூ.15 கோயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது.