districts

img

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை கைவிடவில்லை

சென்னை, மார்ச் 29- நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை கைவிடவில்லை, செயல்படுத்திக் கொண்டி ருக்கிறோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுரு கன் கூறினார். சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 29) தமது  துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதங்க ளுக்கு பதில் அளித்துபேசிய  அமைச்சர் துரைமுருகன், “அத்திகடவு அவிநாசி திட்டம், அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரப் படும். காவிரி-குண்டாறு திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை. “நடந்தாய் வாழி” காவிரி திட்டம் நல்ல  திட்டம். அது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவ னம் ஒன்றிற்கு உத்தரவிடப் பட்டது. முதல் கட்டமாக ரூ.3,900 கோடியில் மேற் கொள்ள ஒன்றிய அரசின்  அனுமதியை கேட்டுள் ளோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை கைவிட வில்லை, செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். தொடர்ந்து புதிய அறி விப்புகளை வெளியிட்ட அவர் மதுரை மண்டலத்தில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், குமரி, இராம நாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங் களில் பாசன அமைப்புகள்  புனரமைப்பு, புதுப்பித்தல்  மற்றும் மறு கட்டுமானம்  செய்யும் 16 பணிகளுக்கு  ரூ.58 கோடி ஒதுக்கப்படு வதாக கூறினார். கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய  மாவட்டங்களில் வெள்ளத் தால் ஏற்படும் பாதிப்புகளை  தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்ட கால அடிப்படை யில் 7 வெள்ளத் தணிப்புப்  பணிகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் அறிவித்தார்.  நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், 2 இடங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் பொருட்டு, கடைமடை கட்டமைப்புகள் உருவாக் கும் பணிகள் ரூ.13.50  கோடியில் மேற்கோள்ளப் படும்.கோவை உட்பட 8  மாவட்டங்களின் 15 இடங்க ளில் புதிய தடுப்பணைகள் ரூ.70.75 கோடியில் மேற் கொள்ளப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் துரை முருகன் வெளியிட்டார்.