districts

img

சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்மநாபபுரம் நகராட்சிக்கான 3 ஆவது வார்டில் வாக்களித்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ரோவர் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

பேராவூரணி சாலை புனித வளன்  தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தனது வாக்கை செலுத்தினார்.

பெரம்பலூர் நகராட்சி 16 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் எ.கலையரசி துறையூர் ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

திருச்சி துவாக்குடி நகராட்சி 18 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரமிளா செழியன் துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஸ்வரி துவாக்குடிமலை ஊராட்சிமன்ற நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சி 7 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நித்யா பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

திருச்சி மாநகராட்சி 47 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.வெற்றிசெல்வம் 59 ஆவது வார்டு செங்குளம் காலனி பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.