மதுரை, ஜூன் 21- மதுரை கிழக்கு வட்டம் அய்லாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாண்டிபட்டி கிரா மத்தில் மின்சாரக் கம்பிகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவுக்கு தொங்கிக்கொண்டி ருக்கின்றன. இதனால் அங்கு உயிர்ப்பலி ஏற் படும் ஆபத்து இருக்கிறது. இதுபற்றி நரசிங்கம்பட்டி துணைமின் நிலைய அதிகாரிகளுக்கு ஊராட்சி நிர்வா கத்தின் சார்பில் பல முறை கோரிக்கை. வைக் கப்பட்டது. அத்துடன் மாயாண்டிபட்டி கிராம மக்களும் கோரிக்கை விடுத்த போதும் இந்த மின்சாரக் கம்பிகளை சீரமைக்கும் வேலை செய்யப்படாமலே உள்ளது. பல மாதங்களாக இந்த நிலையிலேயே மின்கம்பிகள் தொங்கிக் கொண்டிருப்பதால் ஆடுமாடு மேய்ப்பவர் களும் விவசாயி வேலை செய்யவர்களும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். மாயாண்டி பட்டியில் இருக்கும் மின்மாற்றியிலிருந்து சாலையோரத்திலேயே மின்கம்பங்கள் நட்டு குடிநீர்க் குழாய் மோட்டார் இணைப்புக்காக செய்யப்பட்ட வேலை இப்போது பயனின்றி இருப்பதாலும் ஆபத்தாக உள்ளதாலும் உட னடியாக மின்கம்பிகளை சரி செய்திட வேண் டும். அல்லது மின்கம்பங்களையே அகற்றிட வேண்டும். ஏனென்றால் இந்த சாலையில் இரண்டு பேருந்துகளும் சென்று வருகின்றன. அதனால் ஆபத்தை தவிர்த்திட உடனடியாக நரசிங்கம்பட்டி துணைமின்நிலைய நிர்வா கம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவ் வாறு செயல்படாவிடில் ஏற்படும் உயிர்ச் சேதத்துக்கு நிலையத்தின் அதிகாரிகளும் ஊழியர்களுமே பொறுப்பாகும் நிலை ஏற் படும். எனவே மக்களை பாதுகாக்க அசம்பா விதங்கள் ஏற்படாமல் தவிர்க்க உடன் செயல் பட வேண்டும் என்று மாயாண்டிட்டி கிராம மக்களும் அயிலாங்குடி ஊராட்சி நிர்வாக மும் வலியுறுத்துகின்றனர்.