விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட மக்கள் நலப் பிரச்சனை களை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த மத்திய அரசை கண்டித்து தென்காசியில் தொமுச சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி தலைமை தாங்கினார்.தொமுச மத்திய சங்க துணை தலைவர் எஸ்.வெள்ளப் பாண்டி முன்னிலை வகித்தார். தென்காசி பணிமனை தொமுச தலைவர் எம்.மணிகண்டன் உள்ளிட்டோல் பங்கேற்றனர்.