மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அனீஷ்சேகர் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றதோடு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அப்போது ஆட்சியரிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் தவமணி, செயலாளர் முருகன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை-வாகனங்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.