தேனி,நவ.30- தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக முதல்வர் அமல்படுத்த வேண்டும். ஆசி ரியர்களுக்கு கற்பித்தல் பணிக்கு முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும். ஜூலை 1ஆம் தேதி முதல் முடக்கி வைக் கப்பட்ட அகவிலைப்படி உயர்வை நிலு வைத் தொகையுடன் வழங்க வேண் டும். தொகுப்பூதியத்தில் பணியாற் றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனியில் தமிழ்நாடு உயர் நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. மோகன் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் டி.மலைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் டி.வேல்ராஜ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.போராட்டத்தை ஆதரித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கெளதம் அசோக் குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் எம்.சீனி வாசன், கள்ளர் பள்ளி கிளை மாவட்ட செயலாளர் எஸ்.முருகன் ,பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செய லாளர் ஜி.சந்திரன் உள்ளிட்டோர் பேசி னர். மாவட்ட துணைத் தலைவர் விமலா ஜெயராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.