இராமநாதபுரம் மாவட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி ஒன்றியம், சம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாட்டை உயர்த்தும் வகையில் மாணாக்கர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களிடம் குழுவின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.