ஈரோடு, அக். 14- தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஈரோடு, கோவை, சேலத்தில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பயிற்சியாளரால் கத்தி யால் தாக்கப்பட்ட காரைக்குடி ராஜ் ஆனந்திற்கு மருத்துவ செல வையும், விடுப்பு பலன்களையும் உடனே வழங்க வேண்டும். பயிற்சி யாளர்களுக்கு கணிணி மூலம் தேர்வு நடத்துவதை கைவிட்டு, வினா மற்றும் விடைத்தாள் மூலம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கொத்தடிமை கூலிகளாக மாற்றும் வகையில் கணிதம் மற்றும் பொறியியல் வரை படம் பிரிவு பாடங்களை நீக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பயிற்சியாளர்களின் திறனை அதிக ரிக்கும் வகையில்பாடத்திட்டங் களை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலை வர் ரா.சுமதி தலைமை வகித்தார். செயலாளர் சி.சிவசுப்ரமணியம் வரவேற்றார். மாநில தலைவர் மூ. சீனிவாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் ஆர்.குமரவேல், அரசு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி.அண்ணாதுரை, ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.விஜயமனோகரன், வட்டக் கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன், பொருளாளர் ஏ.யூனூஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், இணை செயலாளர் கே.கண்ணன் நன்றி கூறினார்.
சேலம்
இதேபோன்று தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் சேலம் அரசு ஐடிஐ முன்பு கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் கே. சாமிநாதன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலப் பொருளாளர் என்.திருநாவுக்கரசு உரையாற்றினார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி. சுரேஷ், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டை கிளை தலைவர் சி.முருகப்பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை பொருளாளர் கே கணேசன் நன்றி கூறினார்.
கோவை
இதேபோல கோவையில் தமிழ் நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஐடிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் உஷாராணி தலைமை தாங்கினார். கோரிக் கைகள் குறித்து மாநில துணைத் தலைவர் நடராஜன், மாநில பொதுச் செயலாளர் ரவி மற்றும் வளர்மதி, சக்திவேல் ஆகியோர் உரையாற் றினர். இதேபோன்று ஆனைகட்டி யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.