districts

img

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பணி வழங்கிடுக!

மதுரை, ஜூன் 15-   போக்குவரத்துக்கழகத்தில் தொழிலா ளர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதை தடுத்து நிறுத்த  வேண்டும். என்று வலியுறுத்தி அரசு போக்கு வரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில்  அரசு போக்குவரத்து தலை மையகம் முன்பு வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பி.ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் டி. கே. முரளி தரன் விளக்கிப்பேசினார். புறநகர் கிளை இணைச் செயலாளர் என். செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.