மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 50-ஆவது ஆண்டு (பொன்விழா) பேரவை உசிலம்பட்டியில் நடைபெறுகிறது. பேரவையையொட்டி திங்களன்று நடைபெற்ற பேரணியில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சங்க நிர்வாகிகள் வி.பிச்சை, ஜி.இராஜேந்திரன், கனகசுந்தர், மாரியப்பன், பி.மகாதேவன், பி.எம்.அழகர்சாமி, என்.சிவக்குமார், எஸ்.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா,.விஜயராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.செல்லக்கண்ணு, செ.முத்துராணி, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் எம்.ராமர், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் உட்பட ஏராளமான போக்குவரத்துத் தொழிலாளர்கள் செஞ்சட்டை அணிந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாப்போம் என முழக்கமிட்டு சென்றனர்.