ஒட்டன்சத்திரம், ஜூன் 14- தமிழகத்தில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 5ம் வகுப்பு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமு டன் வந்த மாணவ-, மாண விகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் ஒட்டன்சத்தி ரம் மாவட்ட தொடக்கல்வி அலுவலர் ஜெகநாதன் தலைமையில் கல்வி மாவட்ட திட்ட அலுவலர் திருப்பதி, வட்டார கல்வி அலுவலர் குகப்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராஜ், ஆசி ரியர் பயிற்றுநர் சலீம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள் ளிக்கு வந்த மாணவ, மாண விகளுக்கு பூங்கொத்து மற் றும் இனிப்பு வழங்கினர்.பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கீரிடம் அணிவித்து வர வேற்றனர்.
அம்மையநாயக்கனூர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந் தனர் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்தர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, அரசு பள்ளியில் வழங்கப்படும் இலவச பாடப் புத்தகம், பேக், சீருடை, சேமிப்பு பழக்கத்தை வலியுறுத்தும் வகையில் உண்டியல் வழங்கியும் வரவேற்றனர். காளையார்கோவில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு தொடக்கப் பள்ளியில் வாழைமரம் கட்டி மாண வர்களை ஆசிரியர்கள் வர வேற்றனர்.பள்ளிக் கூடத் திற்கு வந்த மாணவ, மாண விகளை குங்குமம், சந்த னம், பூ ,இனிப்பு கொடுத்து பள்ளியின் முகப்பில் வாழை மரம் கட்டி பள்ளி தொடங் கும் நாளை திருவிழாவாக கொண்டாடி வரவேற்பு கொடுத்தனர். விழாவிற்கு தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார்.