districts

img

ஓய்வூதியத் திட்டம் குறித்த நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெறுக!

தாராபுரம், மே 9- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தாராபுரம் மற் றும் மூலனூரில் பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திமுக தனது தேர்தல் வாக்குறு தியில் புதிய பென்சன் திட்டம் ரத்து  செய்யப்பட்டு பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக தமிழ் நாடு நிதியமைச்சர் சட்டமன்றத் தில் பழைய ஓய்வூதியம் சாத்திய மில்லை என தெரிவித்ததை கண் டித்தும், உடனடியாக நடப்பு சட்ட மன்றக்கூட்டத்திலேயே பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தாரா புரம் மற்றும் மூலனூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட் டாச்சியர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, கால் நடைத்துறை அலுவலகம் ஆகிய 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்க ளில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி கள் தில்லையப்பன், மேகலிங் கம், விதுர்வேந்தன், செந்தில் குமார், தங்கவேலு, கண்ணஞ்சி, ராணி ஆகியோர் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூலனூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவல கம், நெடுஞ்சாலைத்துறை அலுவ லகம், ஆரம்பசுகாதார நிலையம், பத்திரபதிவு அலுவலகம் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க நிர்வாகி கள் மாசிலாமணி, சிவராஜ், சந்திர குமார், செல்வி ஆகியோர் தலை மையில் கோரிக்கையை வலியு றுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.