மதுரை, ஆக.12- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை சனிக்கிழமையன்று மாவட் டத் தலைவர் ஜெ.மூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தீ.ராஜி வரவேற்றுப் பேசினார். மாவட்ட இணைச் செயலா ளர் மு.ராம்தாஸ் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநில துணைத் தலைவர் மொ.ஞானத்தம்பி தொடக்க வுரையாற்றினார். மாவட்டச்செயலாளர் க. நீதிராஜா வேலை அறிக்கையும், பொருளாளர் க. சந்திரபோஸ் வரவு செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசகன், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சு. கிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர்ஆ.பரம சிவன் நன்றி கூறினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். அர சுத்துறைகளில் உள்ள காலிப்பணி யிடங்களில் படித்த இளைஞர்களை உடனே பணியமர்த்தி, வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். தொகுப் பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் ஊழியர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்த ரப் படுத்தி காலமுறை ஊதியம் வழங் கிட வேண்டும். கப்பலூரில் உள்ள சுங் கச்சாவடியை அரசு அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.