திருப்பூர், ஏப்.20- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகு திகளிலும் வருவாய் துறை அலுவல கங்கள் முன்பாக புதன்கிழமை உணவு இடைவேளை நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அங்கன் வாடி ஊராட்சி செயலர் உள்ளிட்ட ஊழியர்களை காலமுறை ஊதியம் அடிப்படையில் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், புதிய பென் சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண் டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கல பணிநீக்க காலத்தை முறைப் படுத்தி உரிய பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி கள் பாலசுப்பிரமணியம், ராணி, ராமன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், தாராபுரம் வட்டாச்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு வட்டக்கிளை தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் இல.தில்லை யப்பன், மேகலிங்கம், மணியன், ராம சாமி, மணிமொழி மற்றும் துறைவாரி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட தலைவர் வி.கே.ரேகா தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சேகர், நகர நிர்வாகிகள் பி.சின்னசாமி, எஸ்ரீனா, எம்.குமரன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜ்கண்ணு தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எஸ்.பன் னீர்செல்வம், தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சிவமணி, வட்டபொருளாளர் தமிழரசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நல்லம்பள்ளியில் நடை பெற்ற ஆர்ப்ப்ட்டத்திற்கு வட்ட தலைவர் பி.சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, வட்ட செயலாளர் பிர பாகரன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.அனந்தராம விஜயரங்கன், பி.மகேஸ்வரி, எம்.டி.விஐயன் உள்பட பலர் பங்கேற்ற னர். பாப்பிரெட்பட்டியில் வட்ட தலை வர் பெ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர் தீ.சண்முகம் வட்டசெயலாளர் அன்பழ கன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். காரிமங்கலத்தில் வட்ட துணைத்தலைவர் வெங்கட்டார மன் தலைமை வகித்தார்.மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பா ளர் பி.எஸ்.இளவேணில்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவகி வட்ட துணைத் தலைவர் சஞ்சீவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். அரூரில் வட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டசெயலாளர் குமார் பேசினார். பாலக்கோட்டில் மாவட்ட துணைத்தலைவர் குணசேக ரன் தலைமை வகித்தார். வட்ட தலை வர் தமிழ்செல்வன் வட்டசெயலாளர் மாணிக்கம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிபேசினர்.
சேலம்
சேலம், ஓமலூர் காடையாம்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் நிர்வாகிகள் கலைவாணன் அந் தோணி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். சேலம் மாநகர பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலை வர் என். திருவேரங்கன் மாவட்ட பொரு ளாளர் செல்வம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.