திருப்பூர், ஜூன் 6- டில்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதர வாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி னர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், மல்யுத்த சம்மே ளனத் தலைவர் பிரிஜ்பூசன் சிங்கை கைது செய்ய வலி யுறுத்தி வீராங்கனைகள் டில்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தின் தெற்கு வட்டக்கிளை பொறுப்பாளர் ஆதிலட்சுமி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.ராமன், மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி ஜெயராஜ், தெற்கு வட்ட கிளை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஊழியர்கள் பலர் பங் கேற்றனர். அதேபோல் உடுமலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.