சென்னை, டிச.27- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட் டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி வெள்ளியன்று (டிச.27) தமிழ கம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப் படி நிலுவை, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும், சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதிய மும் வழங்க வேண்டும்.அரசு துறை களில் தனியார் முகமை மூலம் நிய மனங்கள் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார் பில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னை வணிகவரி அலுவல கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்கத்தின் பொருளாளர் ச. டேனியல் ஜெயசிங், “திமுக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தி போராடுகிறோம். இந்த போராட்டத் தின் தொடர்ச்சியாக ஊழியர் சந்திப்பு இயக்கம், 24 மணி நேர தர்ணா, தற் செயல் விடுப்பு போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டம் என அடுத்த டுத்து போராட்டங்கள் நடைபெற உள்ளது” என்றார்.