மதுரை, மார்ச் 21- மதுரை பெரியார் பேருந்து நிலை யத்திலிருந்து சமய நல்லூரை அடுத் துள்ள சி.புதூர் கிராமப்பகுதிக்கு அரசு பேருந்து செவ்வாயன்று மாலை சென்றது. அப்போது பேருந்து நிறுத்தத்திலும் கல்லூரி மற்றும் பள்ளி நிறுத்தங்களி லும் முறையாக பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே பேருந்தில் பயணம் செய்த அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.கே.பொன்னுத்தாய், பஸ்ஸ்டாப்பில் நிறுத்தி பெண்களை ஏற்றி செல்ல வேண்டியது தானே என நடத்துநர் அழகு பாண்டியிடம் கூறினார். அதற்கு நடத்துநர் அழகுபாண்டி மரியாதைக்குறைவாக பேசி, தக ராறில் ஈடுபட்டுள்ளார். சமயநல்லூர் பகுதியில் பேருந்து சென்றபோது, அரசுப்பேருந்து பணியாளர்களின் நட வடிக்கையைக் கண்டித்து மாதர் சங் கத்தினர் பேருந்தை சிறைப்பிடித்து, மறியலில் ஈடுபட்டனர். தரக்குறைவாக பேசிய நடத்துநர், ஒட்டுநர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பேருந்தை காவல்துறை உதவியுடன் சமயநல்லூர் காவல்நிலையத்துக்கு கொண்டுசென்று நிறுத்தினர். பின்னர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் பேருந்தில் பெண்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதி யான நடவடிக்கையும், சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கோரி புகார் அளிக்கப்பட்டது.