districts

கோகுல்ராஜ் கொலையாளிகள் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை, ஜூன் 6-  கோகுல்ராஜ் கொலை வழக்கு வழக்கை  விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் யுவ ராஜ் உட்பட பத்துப் பேருக்கு ஆயுள் தண்  டனை வழங்கி தீர்ப்பளித்தது. மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என கோகுல்ராஜ், குமார், சதீஷ்குமார்,  ரஞ்சித், ரகு உள்ளிட்ட பத்து பேரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ‘‘இந்த வழக்கில், சிசிடிவி காட்சி கள், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி,  தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்  ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரி களும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலை யில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து  செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியி ருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிர காஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வில் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. விசார ணையின் போது, வழக்கின் தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஜூலை  6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  மேலும் ஜாமீன் கோரிய மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவு றுத்தினர்.