சேலம், மார்ச் 8 - சம வேலைக்கு. சம ஊதியம் பெண்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியுவினர் பேரணி மற்றும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.விவசாய தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலை உத்தரவாதப் படுத்திடவும், ஒரு நாள் கூலியாக ரூ.600 உறுதி செய்ய வேண்டும்.தொழிலாளர் நான்கு சட்ட தொகுப்பை ரத்து செய்ய வேண் டும், கோடிக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள், உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த ஆதார விலையை நிர் ணயிக்க வேண்டும். தேசத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்படுவதை தடுக்க வேண்டும். மதவெறியை தூண்டும் பாசிச சக்திகளை முறி யடிக்க வேண்டும். ஜனநாயக உரிமைக்கு போராடும் மக்கள் மீது தேச துரோக பிரிவுகளில் சட்டத்தை பயன்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, நூற்றுக்கும் மேற் பட்டோர், சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து பின்னர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, பி.பன்னீர்செல்வம், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பவித்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வைர மணி ஆகியோர் உரையாற்றினர். இதேபோன்று, ஆத்தூர் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தங்கமலை தலைமை ஏற்றார். இதில் சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எம். குணசேகரன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கடா சலம், மாதர் சங்க மாவட்ட பொரு ளாளர் பெருமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேட்டூர் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி. கருப்பண்ணன் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட்ட பொரு ளாளர் வி.இளங்கோ, மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.