districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் வழங்கிடுக!

மதுரை, மே 24-  காது கேளாதோர், வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு கை பேசி  (செல்போன்) இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகள்  பாதுகாப்பு சங்கம்  சார்பில் செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக் கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திற னாளிகளுக்கான மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறாமல் உள்ளது. இதன்காரணமாக, மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டைகள், பஸ்  பாஸ், ரயில்வே பாஸ் உள்ளிட்ட எதுவும் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாற்றுத் திறனாளிகள் மிக வும் சிரமப்படுகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி சங்கத்  தின்  மாவட்டத் தலைவர் ஆ.பாலமுரு கன், செயலாளர் பி.வீரமணி, மாமன்ற உறுப்பினர்  டி.குமரவேல், எம்.சொர்ண வேல் ஆகியோர் மனு அளித்தனர்.

;