மகளுக்கு தனியார் கல்லூரியில் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுத் தருக! ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி தந்தை மனு
மதுரை, நவ.21- மதுரை வண்டியூர் பகுதி பாரதி தெரு, சங்கு நகர், அய்ய னார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் என்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி . இவர் ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்கிறார். இவரது மகள் மணி மேகலை சேர்மத்தாய் மகளிர் கல்லூரியில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சையின்ஸ் முதலாம் ஆண்டு சேர்க்கை மற்றும் அதில் அரையாண்டு கல்விக் கட்டணம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 900 கட்டணம் முழுவதும் செலுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மணிமேகலைக்கு அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் கலந்தாய்வு மூலமாக இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் செலுத்திய கட்டணத்தை ஒரு வாரத் திற்குள் திருப்பிக்கொடுப்பதாக சேர்மத்தாய் கல்லூரி நிர்வாகம் கூறியது. ஆனால் இதுவரைக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை பலமுறை நேரில் சென்று கேட்டபோது, தருகிறேன் என்று ஏமாற்றி வருகிறார்கள். நான் கட்டிய கட்டணத்தை திரும்பத் தருமாறு சம்பந்தப் பட்ட கல்லூரிக்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
மம்மாணியூரில் கிராம மக்கள் வீடுகளுக்குள் புகுந்து ஆய்வு வனத்துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆட்சியரிடம் முறையீடு
திண்டுக்கல்,நவ.21- திண்டுக்கல் மம்மாணியூரில் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகள் வீடுகளுக்குள் புகுந்து வனத்துறையினர் அதி ரடியாக ஆய்வு நடத்தியதைக் கண்டித்து கிராம மக்கள் திண்டுக்கல் ஆட்சியரிடம் முறையிட்;டனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ளது மம்மாணியூர்.இந்த ஊரில் காளியம்மன், விநாயகர் கோவில் திருவிழாக்கள் வருகின்றன. திருவிழாவை யொட்டி இரு தரப்பினரிடையே தகராறு இருந்து வந்தது. இதனையடுத்து ஒரு தரப்பினர் வனத்துறை அதிகாரிகளி டம் கிராம மக்கள் மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரில் எங்கள் ஊரில் உள்ளவர்கள் வீடுகளில் மான் தோல், கொம்பு உள்ளது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். தவறான புகாரின் அடிப்படை யில் வனத்துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி யது தொடர்பாக மம்மாணியூர் கிராம மக்கள் திங்க ளன்று மனு நீதி நாளன்று திண்டுக்கல் ஆட்சியரிடம் மனுக்கொடுத்தனர். தவறுதலாக புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். கிராம மக்கள் மனுக்கொடுக்கும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சி.குண சேகரன், வடமதுரை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கே. சம்சுதீன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் புதிய கிளை அமைப்பு
வெம்பக்கோட்டை, நவ.21- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஓன்றியம் மேட்டூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைச் செயலாளராக மாணிக்கம் தேர்வு செய்யப் பட்டார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குரு சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் பெரிய சர்க்கரை ஆகியோர் பேசினர்.
வெளிநாட்டில் பணிக்குச் சென்று சித்ரவதையில் உள்ள தாயாரை மீட்டுத் தருக!
மதுரை ஆட்சியரிடம் மகன் மனு
மதுரை, நவ.21- மதுரை கிருஷ்ணாபுரம்காலனி 8 வது தெருவில் வசிப்பவர் வினோத்குமார். இவர், ஓமன் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்று சொல்லொண்ணா துயரத்தை அனு பவிக்கும் தனது அம்மா நாகலெட்சுமியை (39) மீட்டுத்தர வேண்டும் என்று வலி யுறுத்தி திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தார். பின்னர் வினோத்குமார் செய்தியாளர் களிடம் கூறுகையில், கடந்த மாதம் அக்டோ பர் 12 ஆம் தேதி என்னுடைய தாய் நாக லெட்சுமி கொச்சின் விமான நிலையத்திலி ருந்து புறப்பட்டு அபுதாபியில் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்றார். அங்கு வேலைக்கு வைத்திருந்தோர் ஒரு வாரத்தில் ஓமன் நாட்டுக்கு ஒருவரிடம் விற்றுவிட்டார்கள். அங்கு காலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 12 மணிவரை வீட்டு வேலைகளை பார்த்து மீண்டும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 மணிநேரம் கொத்தடி மையாக வேலை செய்வதால் உடல் நலம் கெட்டு மனம் உளைச்சலால் அல்லல்பட்டு மீண்டும் நாடு திரும்ப முயற்கிக்கிறார்கள். இங்கிருந்து அழைத்துச் செல்லும்போது 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி னார்கள். ஆனால் இதுவரை என்னுடைய தாய் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்பி யுள்ளார். நாங்கள் அவரை திருப்பி அனுப்பச் சொன்னால் மீண்டும் வருவதற்கு 1லட்சத்து 50 ஆயிரம் பணம் கட்டினால் தான் திருப்பி அனுப்புவோம் என்று கூறு கிறார்கள். எனவே என்னுடைய தாய் நாக லட்சுமியை பத்திரமாக மீட்டுக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தலித் பூசாரி நாகமுத்தன் தற்கொலை வழக்கு ஒத்திவைப்பு
திண்டுக்கல், நவ.21- தேனி மாவட்டம் கோவில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு நவம்பர். 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பெரியகுளம் அருகேயுள்ளது டி.கள்ளிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர் மகன் நாகமுத்தன் (22). இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கைலாசபட்டி யில் உள்ள ஒரு சிவன் கோவில் பூசாரியாக பணியாற்றி வந்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் சகோ தரர் ஓ.ராஜா பெரிய குளம் சேர்மனாக இருந்த போது இந்த கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் பூசாரிக்கும் ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு வாக்கு வாதம் ஏற்பட்டு நாகமுத்தன் தாக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக போலீசாரிடம் நாகமுத்து ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது புகார் கொடுத்து போலீசார் புகார் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் பூசாரி நாகமுத்தன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தற்போது வன்கொடுமை சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு புதன்கிழமைக்கு அதாவது 23.11.2022 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி உமாமகேஸ்வரனை குறுக்கு விசாரணை செய்ய இருந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேனி எம்.பி. தோட்டத்தில் சிறுத்தை பலி: எம்.பி.யின் உதவியாளரிடம் விசாரணை
தேனி, நவ.21- பெரியகுளம் அருகே கோம்பைப்புதூர் பகுதியில் கடந்த செப்.28ம் தேதி ப.ரவீந்திரநாத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுந்தை உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தேனி வனத் துறையினர் வழக்கு பதிவு செய்து, தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தேனி வனச் சரகர் அலுவலகத்தில் தோட்ட உரிமை யாளரான அதிமுக தேனி எம்.பி., ப.ரவீந்திரநாத்திடம் வனத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ப.ரவீந்திர நாத்தின் உதவியாளரான போடி அருகே கெஞ்சம்பட்டி யைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவரை விசாரணைக்கு ஆஜ ராகுமாறு வனத் துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்த னர். இதன்படி, தேனி வனச் சரகர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான கிருஷ்ணாவிடம் வனச் சரகர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார். காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை விசாரணை நடைபெற்றது.
கோவிலில் வீசப்பட்ட இலவச வேட்டி சேலைகள்
திருவில்லிபுத்தூர், நவ.21- திருவில்லிபுத்தூர் அருகே பெருமாள்தேவன்பட்டி யில் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை கள் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மர்ம நபர் திருடி சென்று பெருமாள்தேவன்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு வீசிச்சென்றனர். கோயில் முன் இருந்த 21 வேஷ்டி, 41 சேலைகளை அப்பகுதி மக்கள் மீட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி அளித்த புகாரில் வன்னியம்பட்டி போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குழாய் உடைந்து இரு நாட்களாக வீணாகும் குடிநீர்
திருவில்லிபுத்தூர், நவ.21- திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தைக்காபட்டி தொடக்க பள்ளி முன் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரு நாட்களாக குடி நீர் வீணாகி வருகிறது. தைக்காபட்டி நகராட்சி தொடக்கப்பள்ளி முன் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலை யில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர் வீணாக சாலையில் ஓடி சாக்கடையில் கலந்து வருகிறது. கசிவு ஏற்பட்ட பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடக்க பள்ளி யில் வாசலில் இந்த பள்ளம் உள்ளதால் குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் நிலவுகிறது. இதனால் நகராட்சி அதிகாரிகள் விரைந்து குழாய் உடைப்பை சரி செய்து, பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தின் விலை திடீர் வீழ்ச்சி
திண்டுக்கல், நவ.21- திண்டுக்கல் மொத்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி யடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மிக முக்கியமானது திண் டுக்கல் வெங்காய மார்க்கெட் ஆகும். வட கிழக்கு பருவமழையால் கடந்த வாரத்தில் சின்ன வெங்காயத்தின் வரவு மிகக் குறை வாக இருந்தது. இதனால் பழைய வெங் காய பேட்டைக்கு 100 டன் வெங்காயம் வந்தது. வயல்களில் விவசாயிகள் வெங்கா யத்தை அறுவடை செய்யாத காரணத்தால் ஏற்கனவே இருப்பில் இருந்த வெங்கா யத்திற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டு கிலோ ரூ.120 சின்ன வெங்காயம் விலை ஏறியது. தற்போது வடகிழக்கு பருவமழை நின்று வெயிலடிக்க ஆரம்பித்ததால் புதிய வெங்காயத்தின் வரவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இரட்டிப்பான வெங்காய வரத்து இருந்தது. 100 டன் வெங்காயம் வந்த இடத்தில் 200 டன் வெங்காயம் வந்துள்ளது. இதனால் கிலோ ரூ.120க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது 40 ரூபாய் குறைந்து கிலோ ரூ.80 ஆனது. இதனால் விவசாயிகள் வேத னையடைந்தனர். அடுத்து வரும் சில நாட்களில் சின்ன வெங்காயம் கூடுதல் வரத்து இருக்கும் என்றும், புது வெங்காயம் வரத்தும் இருக் கும் என்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கி றார்கள். இதன் காரணமாக மேலும் விலை குறைவதற்கும் வாய்ப்புள்ளது அல்லது இந்நிலைமை சீராகவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.