இராஜபாளையம், மார்ச்.19- மார்ச் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி இராஜபாளையம் ஜவஹர் மைதானத்திலிருந்து பொன்விழா மைதானம் வரை இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில், எச்எம்எஸ் மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், ஏஐடியுசி தலைவர் ரவி, பொதுச்செயலாளர் பி.கே.விஜயன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஆர்.கண்ணன், சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.கணேசன், கட்டுமானம் சங்கம் மாவட்ட தலைவர் ஆர்.எம்.மாரியப்பன், சிஐடியு கன்வீனர் எம்.சுப்பிரமணியன், சிஐடியு கட்டுமான சங்கத் தலைவர் ராமச்சந்திரன், கூட்டுறவு மாவட்டத் தலைவர் ஆர்.முனியாண்டி, சிஐடியு போக்குவரத்து சங்க செயலாளர் டி.சன்னாசி, நகர சுத்தி தொழிலாளர் சங்கத்தலைவர் முத்தையா, செயலாளர் கே.பாலு, மின்வாரிய ஊழியர் சங்கம் செயலாளர் பாலசுப்பிரமணியம், உடலுழைப்பு சங்கம் பெரியநாயகம், சுப்பிரமணியம், அந்தோணி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.