districts

மதுரை முக்கிய செய்திகள்

பாஜக அரசை கண்டித்து பிரச்சாரம் 

மதுரை, ஏப்.10-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய  மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மண்ணாடிமங்கலத்தில்  யு.கருப்பசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்  எஸ்.அழகு, சிஐடியு மாவட்டச்  செயலாளர் கே.அரவிந்தன், கட்சியின் மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் செ.முத்துராணி,  ஒன்றியச் செயலாளர்  ஏ.வேல்பாண்டி, கருப்பசாமி, சின்னச்சாமி, பி.வேலுச் சாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சாலை விபத்தில் இருவர் பலி

மதுரை, ஏப்.10- மதுரை அருகே உள்ள வலையங்குளம் நெடுமதுரை யை சேர்ந்தவர் அழகு (48). இவர் ஞாயிறன்று காலை அதே  பகுதியைச் சேர்ந்த மொக்கை என்பவருடன், இரு சக்கர  வாகனத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்றார். பின்னர் திருமங்கலம் புறவழிச்சாலை -நிலை யூர் சாலையில் திரும்பியபோது திருமங்கலத்தில் இருந்து  மதுரை நோக்கி வந்த கார் மோதியது. இதில் இருவரும்  காயமடைந்தனர். இதில் அழகு சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.  மற்றொரு சம்பவம் கோயம்புத்தூரிலிருந்து கன்னியாகுமரிக்கு சனிக் கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்து மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பிரிவில் வந்தபோது நள்ளிரவில் சாலையை கடக்க முயன்ற 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பாம்பு கடித்து பெண் பலி

திருச்சுழி, ஏப்.10- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது பொம்மகோட்டை. இங்குள்ள இந்திராகாலனியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (42). இவரது மனைவி மருதி (38). இவர், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது, விஷப்பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மருதி உயிரிழந்தார்.

இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

விருதுநகர், ஏப்.10- விருதுநகர் அருகே உள்ளது பி.குமராலிங்கபுரம். இப்  பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி பெத்தம்மாள்(35). இவர்களுக்கு பாண்டிச்செல்வி(6), கார்த்தியாயினி(3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ள னர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே  குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இதனால், மன உளைச்சலில் பெத்தம்மாள் இருந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.  திங்களன்று  சரவணக்குமார் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், வீட்டில் இருந்த பெத்தம்மாள், தனது இரு  குழந்தைகளையும் கயிற்றால் தூக்கிலிட்டு உயிரை மாய்த்து  விட்டு  தானும் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ஆமத்தூர் மூவரும் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

புது ராமச்சந்திராபுரம்  ஊராட்சி மக்கள் தவிப்பு

கடமலைக்குண்டு, ஏப்.10- தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள புதுராமச்  சந்திராபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தில் அனைத்துத் தெருக்களும் சாக்கடை  வடிகால் கட்டப்பட்டுள்ளது. ஆனால்  சாக்கடை வடிகால்  தூர்வாரப்படுவதில்லை. சாக்கடை வடிகாலில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளது. இதனால் கழிவுநீர் ஒரே  இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் 24 மணி நேர மும் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ட மனூர் ஊராட்சி நிர்வாம் சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டில் நாட்டு வெடிகுண்டுகள் 

திருவில்லிபுத்தூர், ஏப்.10- திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சோலையப்பன் என்ப வருக்கு சொந்தமான காடு கான்சாபுரம் அத்திக்கோவில்  பகுதியில் உள்ளது இங்கு நாட்டு வெடிகுண்டுகள் இருப்ப தாக  கிடைத்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்குச் சென்ற  காவல்துறையினர் நான்கு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கூமாபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஜேசிபியில் அடிபட்டு தொழிலாளி பலி

பழனி, ஏப்.10- பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது அப்போது ஜேசிபியில் அமர்ந்திருந்த பழனி அடிவாரத்தைச் சேர்ந்த சுபாஷ்  (22) என்பவர்  ஒரு வர் தவறி விழுந்து ஜேசிபியில் அடிபட்டு உயிரிழந்தார். பழனி தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினம்தோறும் இயக்க சாத்தியமில்லை

இராஜபாளையம், ஏப்.10- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள முனை யக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்த ரயில் மற்ற  ரயில்களுடன் பொதுவான பாதையை பகிர்ந்து கொள்வ தால் சென்னை-செங்கோட்டை இடையே வாரம் மூன்று  முறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க இயலாது என தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார் விடுத்திருந்த கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது.

சட்டமன்ற நிகழ்வை திருவில்லிபுத்தூரில் பார்த்த மக்கள்

திருவில்லிபுத்தூர், ஏப்.10- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில்; திங்களன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம்(தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை)யின் மானிய கோரிக்கை நிகழ்வுகளை மக்களின் பார்ப்பதற்காக நேரலை செய்யப்  பட்டது. விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் அதி நவீன மின்னனு விளம்பரத்திரை வாகனம் மூலம் பொது மக்களுக்கு நேரலையில் ஒலிபரப்பினர்.

காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் பதவி  நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி போராட்டம்

சின்னாளபட்டி, ஏப்.10- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய மத்திய பல்கலைக்கழகத்தின்  பதிவாளர் சிவகுமாரின் பதவிகாலம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய  வலியுறுத்தி  பல்கலைக்கழகப் பேராசிரியர்  கள் சங்கத்தினர் பல்கலைக்கழக “பெல்”  மைதானம் அருகே  தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூட்டுறவுத்துறை பேரா சிரியர் மணிவேல் செய்தியாளர்களிடம்  கூறி யதாவது:-  காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிசி யோதரபிஸ்ட் படித்த வி.பி.ஆர்.சிவ குமார் பதிவாளராக உள்ளார். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் காந்திகிராம பல்க லைக்கழகம் வந்த மத்திய தணிக்கைத் துறையின் ஆய்வில்,  காந்திகிராம பல்க லைக்கழகப் பதிவாளர் சிவக்குமார் கல்வி தகுதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.  பதிவாளர் சிவக்குமாரின் ஐந்தாண்டு பதவிக்காலம்  கடந்த 2022-ஆம் ஆண்டு அக்  டோபர் 10-ஆம் தேதியுடன் முடிந்து விட்டது.  ஆனால், சிவக்குமாருக்கு மேலும் ஆறு  மாத காலம் பதவி நீட்டிப்பு செய்து  பல்க லைக்கழகத்தின்  கூடுதல் பொறுப்பு துணை வேந்தராக உள்ள புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மித்சிங் உத்தரவு பிறப்பித்தார்.   ஆறு மாத கால பதவி நீட்டிப்பும் ஏப்.9-ஆம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில்  சிவகுமாருக்கு மீண்டும் இரண்டாவது முறையாக மேலும் மூன்று மாத காலம் பதிவாளராக பதவி நீட்டிப்பு செய்து கூடு தல் பொறுப்பு துணைவேந்தர் குர்மித்சிங் உத்தரவிட்டுள்ளார்.  பதிவாளராக இருப்ப தற்கான கல்வித் தகுதியில்லாத ஒருவ ருக்கு மீண்டும், மீண்டும் பணி நீட்டிப்பு செய்வது ஏற்புடையதல்ல என்றார்.

பேப்பர் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு  நோட்டு புத்தகங்கள் விலை 25-30% உயரும்  

திண்டுக்கல், ஏப்.10- பேப்பர் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வரும் கல்வி யாண்டில் நோட்டுப் புத்தகங்களின் விலை 30 சதவீதம் உயரும் அபா யம் உள்ளதாக அகில இந்திய அள விலான பேப்பர் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் அச்சம் தெரி வித்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்ட பேப்பர் வியாபாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறன்று  நடைபெற்றது. அகில இந்திய பேப்பர் வியாபாரிகள் சங்கத் தலை வர் அசிம் மனோ புரோடியா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பேப்பர் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள்  பங்கேற்ற னர்.  கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு பேப்பர் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராமன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தாண்டு பேப்பர் மூலப்பொருட்களின் விலை கடு மையாக உயர்ந்துள்ளது. இதன்  காரணமாக வரும் கல்வியாண்டில் மாணவர்களின் நோட்டு, புத்த கங்களின் விலை 25 சதவீதத்திலி ருந்து 30 சதவீதம் வரை உயரும்  அபாயம் உள்ளது. தனியார் பள்ளி களில் குறிப்பாக சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அந் தந்த பள்ளிகளே நோட்டுப் புத்த கங்களைக் கொள்முதல் செய்து விற்று வருகிறது. அப்படி விற்கும் பொழுது நோட்டு, புத்தகங்களின் எண்ணிக்கை குறையவோ, அல்லது விலையைக் கூட்டவோ வாய்புள்ளது.  அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு அரசே நோட்டு புத்தகம் தருவதால் பிரச்சனை இல்லை என்றாலும் அரசுக்குக் கூடுதல் நிதிச்செலவு இருக்கும் என்றார்.