திண்டுக்கல், ஏப்.24 திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர், நல்லாசிரியர், சிறந்த தலைமையாசிரியர் களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி யின் செயலர் மற்றும் தாளாளர் க.ரெத்தினம் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் பாலகுருசாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் ஐ.லியோனி மற்றும் அணில் சேமியா குழும நிர்வாக மேலாளர் என்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 12 வாழ்நாள் சாதனையாளர்கள், 80 நல்லாசிரி யர், 12 தலைமையாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட் டன. ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கல்லூரி இயக்கு நர் துரைரெத்தினம், கல்வி இயக்குநர் முனைவர் நா.மார்க்கண் டேயன், செவிலியர் கல்லூரி முதல்வர் வி.வசந்தாமணி, இயற்கை மருத்துவக்கல்லூரி வீ.தீபா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.