districts

img

மயிலாடும்பாறையில் வீடு இழந்த பார்வையற்ற தம்பதியருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கடமலைக்குண்டு,டிச.9-             தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி பார்வையற்ற தம்பதி ஜெயபால்- நிர்மலா உள்ளிட்ட 5 பேரின் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. தனிநபரின் இரக்கமற்ற செயலை கண்டித்து மயிலாடுமுபாறை கிராம மக்கள் ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை குறித்து ஆண்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி யதுடன் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதிய ளித்தார். இதனையடுத்து வீடுகளை இழந்த  குடும்பத்தினர் மயிலாடும்பாறை காளி யம்மன் கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பார்வையற்ற தம்பதி உள்ளிட்ட 5 குடும்பத்தினருக்கும், மயிலா டும்பாறையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தலா 2 சென்ட் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான வீட்டுமனைப் பட்டாக்களை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நேரில் சென்று வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.  இதனால் வீடுகளை இழந்த பார்வை யற்ற தம்பதி உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்த னர். மேலும் விழாவில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 13 பேருக்கு முதி யோர் உதவி தொகைக்கான அரசு ஆணை  வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆண்டி பட்டி சமூக நலத்துறை வட்டாட்சியர் திரு முருகன், வருவாய்த்துறை ஆய்வாளர் சுருளி ஆண்டவர் ,கிராம நிர்வாக அலு வலர் மற்றும் கடமலை- மயிலை திமுக ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிர மணி, தங்கபாண்டியன், கடமலை மயிலை ஒன்றிய குழு பெருந்தலைவர் சித்ரா சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், கருப்பையா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.