districts

பழங்குடியின மாணவிகளுக்கு இலவச செவிலியர் பட்டய படிப்பு

தேனி, ஜூன் 20- தேனி மாவட்டத்தில் உள்ள பழங்குடி யின மாணவிகளுக்கு இலவச செவிலியர் பட்டய படிப்பு சேர விண்ணப்பிக்கும்படி தேனி ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பழங்குடியினர்  உண்டி உறைவிட  பள்ளிகளில் கல்வி பயிலும் பழங்குடியின  மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர் வில் தேர்ச்சி பெற்று 40 சதவீதம் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள். இவர்கள் மேல்படிப்பிற்காக இந்திய நர்சிங்  கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் - தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலி யர் பட்டயப்படிப்பில் (Dipolma in  General Nursing and Midwifery Course) சேர்ந்து தொடர்ந்து3 ஆண்டுகள்  பயில ஆகும் கல்விக் கட்டணம், புத்த கக்கட்டணம், விடுதிக்கட்டணம், சீரு டைக்கட்டணம், மற்றும் இதர கட்டண செல வினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70 ஆயி ரம் முழுவதையும்அரசே ஏற்கும் வகை யில்அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும்அரசாணையினை பின்பற்றி 2023-2024 ஆம் கல்வியாண்டில் பழங்குடியின மாணவிகளை இந்திய  நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடுசெவிலி யர் மற்றும்  தாதியர் குழுமத்தினால் அங்கீக ரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்க ளில் செவிலியர் பட்டயப்படிப்பில் (Dipolma in General Nursing and Midwifery Course) சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.