districts

img

இலவச மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் திருவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  வட்டார வள மைய மேற்பார்வையாளர் மருதக்காளை தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தேசிய அடையாள அட்டை 60 பேருக்கும், ரயில் மற்றும் பேருந்துப் பயணக் கட்டணச் சலுகை 180 பேருக்கும்,உதவி உபகரணங்கள்  34  பேருக்கும் வழங்கப்பட்டன.