சின்னாளப்பட்டி, டிச.20- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னா ளப்பட்டி பேரூராட்சியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத் திற்கு விண்ணப்பம் வழங்குவதாகக் கூறி பலரிடம் ரூ.110 பணம் வாங்குவதாக கீழக்கோட்டை கிராம நிர்வாக அலு வலர் ராஜலட்சுமிக்கு புகார் வந்தது. இதையடுத்து சின்னாளப்பட்டி செம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோர் கடையிலும் காவல் நிலையம் அருகில் உள்ள இணையதள மையத்திலும் ஆய்வு செய்ததில் இப் புகார் உண்மை என கண்டறிந்து பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ் துணைத் தலைவர் ஆனந்தி பாரதி ராஜா, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தடுத்து நிறுத்தி சின்னாளப்பட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். தனியார் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் ராதா பாஜக வின் முக்கிய பிரமுகர் ஆவார். இவர்களுடன் சேர்ந்து தனி யார் இணையதள மையத்திலும் இந்த மோசடி அரங்கேறி உள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி கூறுகையில், தனியார் இணைய மையத்தில் முதல மைச்சரின் பெயரில் விண்ணப்பம் பதிவதற்கு பணம் வாங்குவதாக அறிந்து ,அங்கு சென்று தடுத்து நிறுத்தி னோம். இது சம்பந்தமாக பேரூராட்சி மன்ற தலைவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்தார்.