ரேணுகா மில் தொழிலாளர் போராட்டத்தை மையமாகக் கொண்டு, தமுஎகச முன்னணி தலைவர் அல்லி உதயன் எழுதிய ‘அரண்’ நாவலை தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பெற்றுக்கொண்டார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை,மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், எழுத்தாளர் அல்லி உதயன் ஆகியோர் உடனிருந்தனர்.