கடமலைக்குண்டு, ஜூன் 6- கடந்த 2 மாதங்கள் பள்ளி விடுமுறை நாட்கள் என்ப தால் தேனி மாவட்டம், கோம் பைத்தொழு அருகே மேக மலை அருவிக்க நூற்றுக்க ணக்கான சுற்றுலா பயணி கள் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு சென்றனர். அருவி அருகே அமைந் துள்ள சோதனைச் சாவடி யில் வனத்துறையினர் சுற் றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை பறிமுதல் செய்து வருகின்ற னர். இருப்பினும் சில சுற் றுலா பயணிகள் வனத்துறை யினருக்கு தெரியாமல் பிளா ஸ்டிக் பைகளில் உணவு பொருட்களை அருவிக்கு எடுத்து செல்கின்றனர். இத னால் அருவியில் பிளாஸ் டிக் குப்பைகள் குவிந்து காணப்பட்டது. அருவி அருகே உள்ள மலைப்பகுதி யில் குரங்குகள் அதிக அள வில் உள்ளது. எனவே பிளா ஸ்டிக் பைகளால் குரங்கு களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. எனவே அருவியில் உள்ள பிளாஸ் டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து மிக குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதை யடுத்து நேற்று மேகமலை வனத்துறையினர் அருவி யில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். அங்கு எடுக்கப்பட்ட பிளாஸ் டிக் குப்பைகள் சாக்கு முட்டைகளில் சேகரிக்கப் பட்டு பாதுகாப்பான முறை யில் அழிக்கப்பட்டது. வரும் நாட்களில் வாகன தணிக்கை தீவிர படுத்தப்பட்டு பிளா ஸ்டிக் குப்பைகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரு வியில் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்படும் எனவும் வனத் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.