தேனி, மே 30- கம்பம் அருகே வனப்பகுதியில் போக்கு காட்டும் அரிக்கொம்பன் யானை யை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள். இடுக்கி மாவட்டத்தில் பல உயிர்களை காவு வாங்கிய அரிக் கொம்பன் யானையை கடந்த மாதம் 27 ஆம் தேதி கேரள வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அதன் பிறகு அரிக்கொம்பன் மெல்ல மெல்ல தமி ழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27 ஆம் தேதி லோயர் கேம்ப் மற்றும் கம்பம் பகுதியில் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது. அப்போது பால்ராஜ் என்பவரை தாக்கியதில் உயிரிழந்தார் . அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற் போது சண்முகா நதி அணை பகுதியில் அரிக் கொம்பன் யானை சுற்றித் திரிகிறது. இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்து வக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயா ராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிக் கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல் லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் ‘ட்ரேக்கிங் டீம்’ ஊட்டி யானை கள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழு வினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனை யடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிக் கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப் பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயி ரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட் டுள்ளனர். இதுகுறித்து மருத்துவ குழு வினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கம்பம், சுருளிப்பட்டி, காமைய கவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர் கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீ சார் மற்றும் வனத்துறையினர், மருத்து வக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறை யில் பணியாற்றி வருகின்றனர்.