வரவேற்புக் குழு பொருளாளர் இரா.லெனின் பேச்சு
அங்கன்வாடி ஊழியர் கள் மற்றும் உதவியா ளர்கள் சம்மேளனத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற் றுள்ள பிரதிநிதிகளை வரவேற்று சிஐடியு மதுரை மாநாகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் பேசிய தாவது: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நல னுக்காக மட்டுமே செயல்பட்டு வரு கிறது. ஏழை-எளிய மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கொரோனா தொற்றுநோய் பரவலின் போது, பெரும்பாலான குடும்பங்கள் வருமானத்தை இழந்து நின்றன. நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் இன்னும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை. ஏழைகள் ஏழைகளாவே உள்ள னர். நாட்டின் பணக்காரர்களில் சிலர் உலகின் பெரும் பணக்கா ரர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர். மக்கள் தங்களது சேமிப்பை வங்கியிலிருந்து திரும்பப் பெற ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது. சிஎம்ஐஐ அறிக்கையின்படி, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளை ஞர்களின் வேலையின்மை 42 சத வீதமாக அதிகரித்துள்ளது. தொழி லாளர்களின் பங்கேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு 36.8 சதவீத மாக குறைந்துள்ளது.
சிறு தொழில் கள் மூடப்பட்டுவிட்டதால், கோடிக்க ணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள் ளது. சிஐடியு உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களும் இந்திய மக்களும் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, தியாகத்தை சிதைத்து வருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை பாஜக அவமதித்து வருகிறது. கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில்தான் விவசாயி கள் விரோத கறுப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன. இதற்கெதிராக போராடி விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றிய மோடி அரசு மலர் மழை பொழியச் செய் வது, கைதட்டல், மெழுகுவர்த்தி களை ஏற்றுவது உள்ளிட்ட புதிய நாடகங்களை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் மதுரையில் நடைபெறும் 10 ஆவது மாநாடு அனைத்து வகைகளிலும் வெற்றி பெறட்டும். உங்களது போராட்டங் களுக்கு சிஐடியு தொடர்ந்து ஆத ரவளித்து வருகிறது. மக்கள் விரோதக் கொள்கை களை தோற்கடிப்பதற்கான போராட்டங்களில் தனித்துவமாக வும், இதர தொழிற்சங்கங்களுடன் இணைந்தும் எதிர்காலத்தில் தீவிரமாகப் பங்கேற்போம். நமது போராட்டங்களுக்கான பலன் 2024 ஆம் ஆண்டு நிச்சயம் கிட்டும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை, டிச.6- மதுரையில் செவ்வாயன்று துவங்கிய அங்கன்வாடி ஊழியர் சம்மேளன இந்திய மாநாட்டில் அகில இந்தியத் தலைவர் உஷா ராணி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அவர் பேசுகையில், 10 ஆவது மாநாடு நடைபெறும் மதுரை நகரம் தொழிலாளி வர்க்கத்தை பாது காக்கும் “காவல் கோட்டமாக” அன்று முதல் இன்று வரை திகழ்ந்து வருகிறது. புதிய தாராளமயக் கொள்கை யை ஒன்றிய அரசு செயல்படுத்துவ தால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கி றது. இதில் அங்கன்வாடி ஊழி யர்களும், உதவியாளர்களும் அடங் குவர். மோடி அரசு, உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்ப இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருகிறது. சமூக நலத் திட்டங்களின் மீது கொடூரமான பொருளாதாரத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் குறிப்பாக, தொழி லாளி வர்க்கத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆளும் வர்க்கத்தின் துணையுடன் வலதுசாரி முதலாளித்துவ அரசி யல் கட்சிகள் இனம், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் வெறுப்பு ணர்வை பரப்பும் கொள்கையை மக்கள் மத்தியில் விதைத்து வரு கின்றன.
முன்னணி தூதுவர்கள்...
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு முக்கியமானது. அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை பராமரிக்கும் முன் னணி தூதர்களாக உள்ளனர், ஒவ்வொரு நாளும் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி பணி யாளர்கள் பணி நிரந்தரம், சமூகப் பாதுகாப்பின்றி பணியாற்று கின்றனர். ஏழை-எளிய மக்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் நம்மை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோரிக் கைகளுக்காக போராடும் நாம் மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதிலும் பங்களிக்க வேண்டும். ஒன்றிணைந்த போராட்டம் ஒரு போதும் தோல்வியடையாது. 10 ஆவது மாநாடு அங்கன்வாடி ஊழி யர்களின் முக்கியத்துவத்தை நாட் டிற்கு வெளிச்சம் போட்டுக் காட் டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பொதுச் செயலா ளர் ஏ.ஆர்.சிந்து ஸ்தாபன அறிக் கையை சமர்ப்பித்தார். அதன் பின் னர் பிரதிநிதிகள் விவாதம் தொடங் கியது.